ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: 3 மாதத்தில் விசாரணையை முடிப்போம் சிபிஐ
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கை 3மாதங்களில் முடிப்போம் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் இதைத் தெரிவித்தார்.
இதுகுறித்து வேணுகோபால் நீதிபதிகளிடம் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடித்து விடுவோம். இந்த கால கட்டத்திற்குள்ளேயே குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்து விடுவோம்.
விசாரணைக்கு 2 மாத காலமாகும். அடுத்த ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு விடும்.
ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நாங்கள் விசாரித்து வருகிறோம். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஆதாரங்கள், சாட்சியங்கள் தேவை. அதை சேகரிக்க முயன்று வருகிறோம். சிஏஜி அறிக்கை என்பதை ஆதாரமாக கருத முடியாது. அது ஒரு நிதி நிர்வாகம் தொடர்பான அறிக்கை மட்டுமே. நிதி நிர்வாகம் சரியாக கையாளப்படவில்லை என்று மட்டுமே சிஏஜி கூறியுள்ளது. மாறாக குற்றம் நடந்துள்ளதாக அது கூறவில்லை.
எனவே விசாரணை முழுமையாக நடந்து முடிந்த பின்னரே நாங்கள் செய்த விசாரணை சரியான முறையில் நடந்ததா, இல்லையா என்பதை கூற முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications