நாளை பீகாரில் வாக்கு எண்ணிக்கை-மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா நிதீஷ் குமார்?

பீகார் மாநில சட்டசபையில் உளஅள 243 தொகுதிகளுக்கும் 6 கட்டமாக தேர்தல் நடந்தது. பெருமளவிலான வன்முறைகள் இல்லாமல் இந்த தேர்தல் நடந்தது வியப்பளிக்கும் வகையில் அமைந்தது. மேலும் மாவோயிஸ்ட் நக்சலைட்கள் மிரட்டலை மக்கள் புறக்கணித்து விட்டனர். தேர்தல் முடிந்த அடுத்த நாள் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் மட்டுமே இந்த தேர்தலையொட்டி நடந்த மிகப் பெரிய வன்முறைச் செயலாகும்.
இந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இத்தோடு சேர்த்து பங்கா நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலுக்கான வாக்குகளும் எண்ணப்படும்.
மொத்தம் 42 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இங்கெல்லாம் புற ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குகள் பதிவாகியுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்த்த தேர்தலில் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி ரகோபூர், சோனேபூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலில் நிதீஷ் குமார்-பாஜக கூட்டணியே மீண்டும் பெரும் வெற்றி பெறும் என வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
ஆனால் இதை மீறி நாங்கள் வெற்றி பெறுவோம் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. 2வது இடத்தைப் பிடித்தாலே அதற்கு பெரிய வெற்றி என்ற நிலைதான்.
இத்தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் - பாஜக ஒரு கூட்டணியாகவும், லாலு -பாஸ்வான் தனி அணியாகவும் போட்டியிட்டன. காங்கிரஸ் யாருடனும் சேராமல் தனியாக நின்றது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications