For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் விவகாரம்-11வது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் அமளி

Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து ஜேபிசி விசாரணை கோரி இன்று 11வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தை ஜேபிசி விசாரணைக்கு விட வேண்டும் என்று கோரி இரு அவைகளிலும் பாஜக தலைமையிலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி வருகின்றன.

இதனால் கடந்த 10 நாட்களாக இரு அவைகளிலும் ஒரு அலுவலும் நடைபெற முடியவில்லை. இன்று 11வது நாளாக இரு அவைகளிலும் அமளி தொடர்ந்தது.

இன்று காலை இரு அவைகளும் கூடியபோது அமளியில் எதிர்க்கட்சிகள் குதித்ததால் சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் பிற்பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.

12 மணிக்கு இரு சபைகளும் கூடியபோதும் அமளி தொடர்ந்தது. லோக்சபாவில் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி எதிர்க்கட்சியினர் குரல் கொடுத்தனர். அதேபோல ராஜ்யசபாவிலும் அவைத் தலைவர் இருக்கை முன்பு கூடி எதிர்க்கட்சியினர் அமளியில்ஈடுபட்டனர்.

இதையடுத்து இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X