மழை வெள்ளப் பாதிப்பு-நிவாரணப் பணிகளில் ஈடுபட திமுகவினருக்கு கருணாநிதி உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதில் திமுகவினர் தீவிர கவனம் செலுத்துமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடுமழை, வெள்ளம் ஆகியவற்றால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் நிவாரணப் பணிகளிலே தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.
என்றாலும், அமைச்சர்களும், பல்வேறு பொறுப்புகளிலே உள்ள கழகத்தினரும், உள்ளாட்சித் துறை அலுவலர்களும், கழகச் செயலாளர்களும் உடனடியாக அரசு அலுவலர்களுக்கு ஒத்துழைத்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், சேத விபரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாக அரசுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications