பட்டாசு வெடித்த தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு-5 பேர் கைது

கோவில்பட்டி இனாம்மணியாச்சி நடுத்தெருவைச் சேர்ந்த மூக்கையா மகன் பரமசிவம். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் காந்திநகர் வழியாக செண்பகவல்லி நகருக்கு நேற்று இரவு 7 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்தனர்.
இதன் காரணாக இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் பரமசிவத்தின் வலது கன்னத்தில் அவர்கள் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
காயம் அடைந்த பரமசிவம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் லதா வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை அரிவாளால் வெட்டிய காந்தி நகர் ஆறுமுகப்பாண்டி (25), ராமமூர்த்தி ( 25), சேகர் (எ) தனசேரன் (24), தண்டபாணி (33), திருநெல்வேலி மாரியப்பன் (27) ஆகிய 5 பேரையும் கைது செய்தார்.












Click it and Unblock the Notifications