வாக்குப்பதிவு எந்திரம்: அதிமுக கோரிக்கை-ஆணையம் பரிசீலனை
சென்னை: மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக அதிமுக விடுத்த கோரிக்கையை தொழில் வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தின் மூலம் வாக்குப் பதிவு செய்யும் முறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் தாங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோமோ அந்த கட்சிக்குத் தான் அந்த வாக்கு சென்றிருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை வாக்காளர்கள் மத்தியில் நிலவுகிறது.
மேலும், மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடியோ அல்லது மாற்றமோ செய்யப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் பொது மக்களிடையேயும், அரசியல் கட்சிகளிடையேயும் எழும்போது மோசடி நடந்திருக்கிறதா, இல்லையா என்பதை நிரூபிக்க எந்த வழிவகையும் இல்லை.
எனவே, மின்னணு வாக்கு எந்திரங்கள் நம்பகத்தன்மையற்றவை என்பதால் தான் பெரும்பான்மையான முன்னேறிய நாடுகள் இந்த முறையை கைவிட்டுவிட்டன என்பதை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சுட்டிக்காட்டி, மீண்டும் வாக்குச் சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மின்னணு வாக்கு எந்திரங்களில் செலுத்தும் வாக்குகளை சரிபார்க்கும் அளவிற்கு அச்சிடப்பட்ட தகவலை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
அந்தக் கோரிக்கையை ஏற்கும் வகையில், தேர்தல் ஆணையம் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்தையும் கோரியது.
இந்தச் சூழ்நிலையில், அதிமுகவின் கருத்துக்கு தனது நன்றியை தெரிவித்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், அதிமுகவின் கருத்தினை தொழில் வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications