2 தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து ரூ. 60 கோடியை ஆலோசனைக் கட்டணமாக பெற்றேன்-நீரா
டெல்லி: இரு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்காக முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் நான் பேசியது உண்மைதான். இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஆலோசனைக் கட்டணமாக ரூ. 60 கோடி பெற்றேன் என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் நீரா ராடியா ஒப்புக் கொண்டுள்ளாராம்.
கடந்த புதன்கிழமை நீரா ராடியாவை அழைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தியது அமலாக்கப் பிரிவு. அப்போது அவருக்கும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்புகள், பண பரிவர்த்தனைகள், ராஜாவுடன் ராடியாவுக்கு உள்ள தொடர்புகள் குறித்து அப்போது அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, டாடா டெலிசர்வீஸஸ் நிறுவனம் உள்பட 2 நிறுவனங்களுக்காக தான் அமைச்சர் ராஜாவுடன் பேசியதாக நீரா ராடியா தெரிவித்தார். மேலும் இரு வாடிக்கையாளர்களிடமிருந்து (தொலைத் தொடர்பு நிறுவனங்கள்) சட்டப்பூர்வமான ஆலோசனைக் கட்டணமாக ரூ. 60 கோடியைப் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
ராஜாவுக்கும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கும், தனக்கும் இடையிலான தொடர்புகளையும் அவர் விளக்கிக் கூறியுள்ளார்.
வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் நீரா. இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ளவர் இவர். விசாரணையின்போது, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தனது பங்கு குறித்து தனது கைப்பட எழுதிய 20 பக்க வாக்குமூலத்தையும் நீரா அதிகாரிகளிடம் கொடுத்தார்.
இதை பண மோசடிச் சட்டம் 50வது பிரிவின் கீழ் அதிகாரிகள் பதிவு செய்து கொண்டுள்ளனர். இதை கோர்ட்டில் சாட்சியமாகவும் தாக்கல் செய்ய அமலாக்கப் பிரிவு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி மண்டல அமலாக்ப் பிரிவு துணை இயக்குநர் பிரபா காந்த் கூறுகையில், ராடியாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளோம். மேலும் சில ஆவணங்களைக் கேட்டுள்ளோம். தேவைப்படும்போது அவர் மீண்டும் அழைக்கப்படுவார் என்றார்.
இதற்கிடையே, தனது வாடிக்கையாளர்களான டாடா டெலிசர்வீஸஸ் மற்றும் யுனிடெக் வயர்லஸ் நிறுவனங்களுக்காக ராஜாவை, ராடியா நேரிலும் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications