விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு ராஜாவுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணையை சிபிஐ மந்த கதியில் நடத்தி வரும் நிலையில் அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் இதை விரைவுபடுத்தியுள்ளது. சமீபத்தில் நீரா ராடியாவை அழைத்து விசாரித்த இயக்குநரகம் தற்போது ராஜா மற்றும் அவரது உதவியாளர்களிடம் விசாரணை நடத்த தயாராகி வருகிறது.
விசாரணைக்கு உதவுமாறும்,ஒத்துழைக்குமாறும் கூறி வெள்ளிக்கிழமையன்று ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாம்.
விரைவில் ராஜாவையும், அவரது உதவியாளர்களையும் அழைத்து அமலாக்கப் பிரிவு விசாரிக்கும் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் கூறுகையில், ராடியாவின் நிறுவனங்களுக்கும், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட பண விவரங்கள் குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் வெளிநாடுகளிலிருந்து பெருமளவில் பணம் வந்தது குறித்தும், அதில் வரி ஏய்ப்பு, அன்னியச் செலாவணி விதிமீறல் நடந்திருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.
ராடியாவுக்குத் தொடர்புடைய ஏழு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும், ராஜாவுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் விசாரித்து வருகிறோம். இதற்காக ராஜாவையும் விசாரிக்கவுள்ளோம்.
வழக்கில் தொடர்புடைய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஐந்துக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மற்ற இரு நிறுவனங்கள் சார்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது. இவை கிட்டத்தட்ட 3000 பக்கங்களுக்கம் மேல் உள்ளன. அவற்றை ஆய்வு செய்துவருகிறோம்.
கடந்த ஆண்டு சிபிஐ ரெய்டு நடத்தி பறிமுதல் செய்த ஆவணங்களை தருமாறும் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார் அவர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications