ராஜபக்சே பிரிட்டன் பயணம்... கைது செய்யப்படுவாரா?

Subscribe to Oneindia Tamil

Rajapakse
கொழும்பு: போர்க்குற்றங்களுக்காக கைது செய்யப்படலாம் என்ற எச்சரிக்கையையும் மீறி பிரிட்டன் பயணமானார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் விசேஷ அழைப்பு விடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து அவர் கடந்த மாதம் லண்டன் செல்வதாக இருந்தது.

ஆனால் போர்க்குற்ற செயல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

இந்த நிலையில் அவர் 3 நாள் பயணமாக நாளை (30-ந்தேதி) இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சிறப்பரையாற்றுகிறார்.

பின்னர் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக் ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

இத் தகவலை இலங்கையில் இருந்து வெளியாகும் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்து செல்லும் அதிபர் ராஜபக்சே போர் குற்றச் செயல்களின் அடிப்படையில் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

அவ்வாறு அவர் கைது செய்யப்பட்டால் அதற்கு தாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+