ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை: மன்மோகன் சிங், கிருஷ்ணாவுடன் சந்திப்பு
மாஸ்கோ: ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் ஒரு நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
லாவ்ரோவ் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
அன்மை காலமாக இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு மீண்டும் பலப்பட்டு வருகிறது. ரஷ்ய ராணுவ உபகரணங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது.
கடந்த 2009-ம் ஆண்டு ரஷ்யா, இந்தியா இடையேயான வர்த்தகம் 7.5 பில்லியன் டாலரைத் தொட்டது. வரும் 2015-ம் ஆண்டுக்குள் இது 20 பில்லியன் டாலரைத் தொட இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டமும், ரஷ்யாவில் உள்ள சக்லைன்-1 எண்ணெய் மற்றும் கேஸ் வயலை இந்தியாவின் ஓஎன்ஜிசியுடன் சேர்ந்து கண்டுபிடித்ததும் இவ்விரு நாடுகள் கூட்டாகச் செய்யும் 2 மிகப் பெரிய திட்டங்களாகும்.
அடுத்த மாதம் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications