உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பரிசீலனை-மீண்டும் டிஜிபியாக லத்திகா சரண் நியமனம்

யுபிஎஸ்சி பரிந்துரைத்த குழுவிலிருந்து ஒரு டிஜிபி தேர்வு செய்யப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக லத்திகா சரண் டிஜிபியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தீயணைப்புத்துறை டிஜிபி ஆர்.நடராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், உச்சநீதிமன்ற வழிகாடுத்தல் நெறிப்படி லத்திகா சரண் நியமிக்கப்படவில்லை. லத்திகா சரணை விட சீனியரான தன்னைப் புறக்கணித்து விட்டு நியமனம் நடந்துள்ளதாக கூறியிருந்தார் நடராஜ்.
அவருக்கு ஆதரவாக டிஜிபியும், தற்போது சிஆர்பிஎப்பின் தலைவராக உள்ளவருமான விஜயக்குமாரும் அபிடவிட் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், லத்திகா நியமனம் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது. புதிய டிஜிபியை தேர்வு செய்ய வேண்டும். டிஜிபி பதவிக்கு தகுதி உடையவர்கள் பட்டியலை யுபிஎஸ்சிக்கு தமிழக அரசு அனுப்ப வேண்டும். அவர்கள் அதிலிருந்து 3 பேரை தேர்வு செய்து தமிழக அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும். பரிந்துரைக்கும் பட்டியலிலிருந்து புதிய டிஜிபியை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு காலக்கெடுவையும் அது விதித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் செய்தது. ஆனால் தமிழக அரசு கோரிய இடைக்காலத் தடையை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
இதையடுத்து கோர்ட் உத்தரவுப்படி யுபிஎஸ்சிக்கு தகுதிப் பட்டியலை தமிழக அரசு அனுப்பியது. அதில் லத்திகா சரண் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து டிஜிபிக்களின் பெயர்களையும் இணைத்து அனுப்பியிருந்தது. அதைப் பரிசீலித்த யுபிஎஸ்சி லத்திகா சரண் உள்ளிட்ட 3 பேரை இறுதி செய்து தமிழக அரசுக்கு அனுப்பியிருந்தது.
அதிலிருந்து மீண்டும் லத்திகா சரணை டிஜிபியாக தேர்வு செய்து நியமித்துள்ளது தமிழக அரசு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications