வைகையில் வரலாறு காணாத வெள்ளம்-தரைப்பாலம் உடைந்தது
Subscribe to Oneindia Tamil
பரமக்குடி: வைகை ஆற்றில் பெரும்வெள்ளம் ஏற்பட்டதையடு்த்து பரமக்குடி வைகையாற்று தரைப்பாலம் உடைந்தது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. மதுரையில் கொட்டித் தீர்த்த மழையால் வைகை ஆற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பரமக்குடி வைகையாற்று தரைப்பாலம் உடைந்தது.
இதையடுத்து சிவகங்கை, இளையான்குடி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டது.
பரமக்குடி- இளையான்குடிக்கு இடையிலான இந்த தரைப்பாலம் ரூ. 20 லட்சம் செலவில் சமீபத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications