கேரட் விலை கிடு கிடு!
சென்னை: தமிழகத்தில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. காரட், பீட்ருட் போன்ற மலை காய்கறிகளின் விலை, கடும் மழை காரணமாக கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கேரட் இன்றைக்கு கிலோ ரூ 48 வரை விற்கப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தென் மாவட்டங்களில் நிறைய காய்கறிகள் சேதமாகிவிட்டது. விளை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
இதன் காரணமாக கடும் காய்கறி தட்டுப்பாடு உருவாகியுள்ளது. அதனால்தான் கடந்த ஒரு மாதமாக காய்கறி விலை குறையாமல் ஏறுமுகமாக உள்ளது.
வெங்காயம், உருளைக் கிழங்கு போன்றவற்றின் விலையும் எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் காய்கறி விலை இது:
கத்தரிக்காய் ரூ 25 முதல் 35 வரை (ரகத்துக்கேற்ப), தக்காளி- ரூ. 16, கோஸ்- ரூ. 20 கேரட்- ரூ. 48, அவரை- ரூ. 45, பீன்ஸ்- ரூ. 45, புடலங்காய்- ரூ. 45, பீட்ரூட்- ரூ. 25, முள்ளங்கி- ரூ. 25, சேனை- ரூ. 25, சௌசௌ- ரூ. 25, குடைமிளகாய்- ரூ. 35, உருளை- ரூ. 28, முருங்கைக்காய்- ரூ. 60, வெங்காயம்- ரூ. 45, சிறிய வெங்காயம்- ரூ. 40.