நாகப்பட்டினம் - வாஸ்கோடகாமா இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்
சென்னை: நாகப்பட்டினம் - வாஸ்கோடகாமா இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறி்த்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
வாஸ்கோடகாமா - நாகப்பட்டினம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவிருக்கிறது. இது மங்களூர், ஈரோடு, திருச்சி வழியாகச் செல்லும். அடுத்த மாதம் 6-ம் (6-12-2010) தேதியில் இருந்து வரும் ஜனவரி மாதம் 17-ம் தேதி் வரை (17-1-2011) இயக்கப்படும் சிறப்பு ரயில் (0675) ஒவ்வொரு திங்கள்கிழமையும் இரவு 7.10 மணிக்கு வாஸ்கோடகாமாவில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 7.15 மணிக்கு நாகப்பட்டினம் வந்தடையும்.
மறுமார்க்கமாக அடுத்த மாதம் 7-ம் தேதி (7-12-2010) முதல் ஜனவரி மாதம் 18-ம் தேதி (18-1-2011) வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் (0676) செவ்வாய்கிழமைதோறும் இரவு 10.30 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.
இதேபோன்று பாட்னா-பெங்களூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படுகிறது. (30-11-2010) இன்று முதல் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை இயக்கப்படும் (7-12-2010) சிறப்பு ரயில் (வ.எண் 2296 ஏ) ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் இரவு 7.55 மணிக்கு பாட்னாவில் இருந்து புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 8.40 மணிக்கு பெங்களூர் வந்தடையும்.
பெங்களூரில் இருந்து 3-12-2010 மற்றும் 10-12-2010 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (2295 ஏ) ஞாயிற்றுக்கிழமை காலை 9.20 மணிக்கு பாட்னாவை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications