நாகப்பட்டினம் - வாஸ்கோடகாமா இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகப்பட்டினம் - வாஸ்கோடகாமா இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறி்த்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

வாஸ்கோடகாமா - நாகப்பட்டினம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவிருக்கிறது. இது மங்களூர், ஈரோடு, திருச்சி வழியாகச் செல்லும். அடுத்த மாதம் 6-ம் (6-12-2010) தேதியில் இருந்து வரும் ஜனவரி மாதம் 17-ம் தேதி் வரை (17-1-2011) இயக்கப்படும் சிறப்பு ரயில் (0675) ஒவ்வொரு திங்கள்கிழமையும் இரவு 7.10 மணிக்கு வாஸ்கோடகாமாவில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 7.15 மணிக்கு நாகப்பட்டினம் வந்தடையும்.

மறுமார்க்கமாக அடுத்த மாதம் 7-ம் தேதி (7-12-2010) முதல் ஜனவரி மாதம் 18-ம் தேதி (18-1-2011) வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் (0676) செவ்வாய்கிழமைதோறும் இரவு 10.30 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.

இதேபோன்று பாட்னா-பெங்களூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படுகிறது. (30-11-2010) இன்று முதல் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை இயக்கப்படும் (7-12-2010) சிறப்பு ரயில் (வ.எண் 2296 ஏ) ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் இரவு 7.55 மணிக்கு பாட்னாவில் இருந்து புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 8.40 மணிக்கு பெங்களூர் வந்தடையும்.

பெங்களூரில் இருந்து 3-12-2010 மற்றும் 10-12-2010 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (2295 ஏ) ஞாயிற்றுக்கிழமை காலை 9.20 மணிக்கு பாட்னாவை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று அதில் கூறப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+