சிபிஐ புதிய இயக்குநராக ஏ.பி.சிங் பொறுப்பேற்பு-ஐபி புதிய தலைவராக சந்து நியமனம்
டெல்லி: ஐபிஎஸ் அதிகாரி அமர் பிரதாப் சிங் இன்று மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் இன்னும் 2 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார். அதேபோல ஐபி எனப்படும் உளவுப்பிரிவின் புதிய தலைவராக சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிஐயின் இயக்குநராக இதுவரை அஷ்வனி குமார் இருந்து வந்தார்.
தலைவர் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான நியமனக் குழு ஏ. பி. சிங்கைத் தேர்வு செய்தது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிங் (58) 1974-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாவார். இதற்கு முன் புலனாய்வு ஏஜென்சியின் சிறப்பு தலைவராக இருந்தார். மேலும், எல்லை பாதுகாப்பு படையின் கூடுதல் டைரக்டர் ஜெனரலாகவும் இருந்தார்.
சிங் சிறந்த இந்திய காவலருக்கான பதக்கத்தையும், குடியரசுத் தலைவரின் சிறந்த காவலருக்கான பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
அஷ்வனி குமாரின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி சிபிஐ தலைவராகப் பொறுப்பேற்ற அவர் 2 வருடம், 4 மாதம் இந்தப் பதவியை வகித்துள்ளார்.
மத்திய உளவுப் பிரிவின் புதிய தலைவர் சந்து:
மத்திய உளவுப் பிரிவின் புதிய தலைவராக நேசல் சந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்து 1973-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாவார். இவர் வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் அடு்த்த 2 ஆண்டுகளுக்கு மத்திய உளவுப் பிரிவுத் தலைவராக இருப்பார்.
தற்போது மத்திய உளவுப் பிரிவின் சிறப்பு தலைவராக இருக்கும் சந்து வரும் ஜனவரி 1-ம் தேதி தலைவராகப் பொறுப்பேற்கிறார். தற்போதைய தலைவராக இருக்கும் ராஜீவ் மாதுரின் பதவிக் காலம் அடுத்த மாதம் 31-ம் தேதியுடன் முடிகிறது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications