உ.பி.யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி பலி
Subscribe to Oneindia Tamil
முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.
சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள உத்தம் விஹார் காலனியைச் சேர்ந்தவர் குன்வர் பால் (30). இவர் தனது மனைவி பப்லி (25), மகள் அனுஷ்கா (4) மற்றும் மகன் நிதின் (1) ஆகியோருடன் வசித்து வந்தார்.
நேற்றிரவு இவர்கள் தூங்கிக் கொண்டிருக்கையில் வீடு திடீர் என்று தீப்பிடித்தது. இதில் 4 பேருமே உடல் கருகி பரிதாபமக உயிர் இழந்தனர்.
இந்த விபத்திற்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications