For Daily Alerts
Just In
பிஎஸ்என்எல் ஸ்டிரைக்-ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்
நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை முதல் இப்போராட்டம் தொடங்கியது. இதையடுத்து நாடு முழுவதும் பி.எஸ்என்எல் அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்த்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தினால் தொலைபேசி சேவை முடங்கும் அபாயம் உள்ளது. மேலும், வங்கி, ஏடிஎம் சேவைகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Story first published: Wednesday, December 1, 2010, 13:20 [IST]