For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களின் எதிரியே ஜி.டி.பி தான்: மணிசங்கர் ஐயர்

Google Oneindia Tamil News

Manishankara Aiyar
டெல்லி: உண்மையான பொருளாதார நிலமையை பிரதிபலிக்காத ஜி.டி.பி. (நாட்டின் மொத்த உற்பத்தி) தான் மக்களின் முதல் எதிரி என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் ஐயர் கூறியுள்ளார்.

இந்தியாவில் சமூக முன்னேற்றம் பற்றிய அறிக்கையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக புத்தக வெளியீட்டகம் வெளியிட்டது. அதில் பேசிய ஐயர் பேசுகையில்,

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட அரசு பயன்படுத்தும் அளவுகோல் சரியில்லை. நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 57 சதவிகிதம். இதனால் பயனடையும் மக்கள் 1 சதவிகிதம் மட்டுமே.

ஜி.டி.பி. அடிப்படையில்தான் தனி நபர் வருமானத்தை கணக்கிடுகின்றனர். அவ்வாறு கணக்கிடுகையில் உண்மையான பொருளாதார நிலைமையை காட்டாததால் இந்தியர்கள் வறுமையில் இருந்தாலும் ஜி.டி.பி. அடிப்படையில் இந்தியா வளமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் வறுமைக் கோட்டை கணக்கிடும் முறையும் சரியில்லை. மக்களின் எதிரியாக இருப்பதே இந்த ஜி.டி.பி. தான்.

ஜி.டி.பி, தனிநபர் வருமான கணக்கீடு, தேசிய வறுமைக் கோட்டு அளவுகோல் நிர்ணயம் ஆகியவை இந்தியர்கள் உண்மையில் வறுமையில் இருக்கிறார்கள் என்பதை மறைத்து வளமாக இருப்பதாகக் காட்டுகின்றன என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X