தமிழர் எதிர்ப்புக்குப் பயந்து ராஜபக்சே நிகழ்ச்சியை ரத்து செய்தது ஆக்ஸ்போர்டு!

இது குறித்து அந்த அமைப்பு தனது இணையத் தளத்தில் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
ஆக்ஸ்போர்ட் யூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுவதற்காகவே மகிந்த ராஜபக்சே பிரிட்டன் வந்துள்ளார். ஆனால் அவரது வருகையை பிரிட்டனில் வசிக்கும் தமிழர்கள் கடுமையாக எதிர்த்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பல ஆயிரம் இளைஞர்களும் பெண்களும் இந்த எதிர்ப்பில் பங்கேற்று, போர்க்குற்றவாளி ராஜபக்சே திரும்பிப் போக வேண்டும் என முழங்கினர்.
இதனால் விமான நிலைய பின்வாசல் வழியாக தனது பரிவாரங்களுடன் வெளியேறினார் ராஜபக்சே.
இன்று வியாழக்கிழமை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மன்றத்தில் ராஜபக்சே பேசுவதாக இருந்தது. ஆனால் இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை எதிர்த்து பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பிரிட்டன் தமிழர்கள் அறிவித்திருந்தனர். இதற்காக முறையான அனுமதியையும் பிரிட்டிஷ் போலீசாரிடம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், ராஜபக்சே பங்கேற்கும் நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும், இந்த ரத்து காரணமாக தாம் வருந்துவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
இன்று நடக்கக்கூடிய ஆர்ப்பாட்டங்களின் அளவு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜபக்சே நிகழ்ச்சி பாதுகாப்பாக நடக்கும் என்று தாம் கருதவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ராஜபக்சேவை கைது செய்யக் கோரி இன்று பிரமாண்ட ஆர்ப்பாட்டம்...
இதற்கிடையே, போர்க் குற்றவாளியான ராஜபக்சே ஆக்ஸ்போர்டுக்கு வருவதை எதிர்த்தும், அவரையும், இலங்கை ராணுவ அதிகாரிகளையும் உடனடியாக கைது செய்யக் கோரியும் பிரிட்டிஷ் வாழ் தமிழர்கள் இன்று பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
இதற்கான முறையான அனுமதியை பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு வழங்கியுள்ளது. ராஜபக்சே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டாலும் போராட்டம் தொடரும் என தமிழர் அமைப்புகள் அறிவித்துள்ளன.
ஆர்ப்பாட்டம் குறித்த துண்டுப் பிரசுரங்கள் லண்டன் நகரமெங்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மேலும், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான பெரிய பேனர்களை தொங்கவிட்டவாறு வேன்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரிட்டன்வாழ் தமிழ் மக்கள் மட்டுமின்றி, முஸ்லிம், சிங்கள மக்களும் பங்கேற்க முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ், சுவிஸ் போன்ற மற்ற நாடுகளில் உள்ள தமிழர்களும் பங்கேற்க உள்ளனர்.
பல ஆயிரம் மக்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வருவோருக்காக குறிப்பிட்ட நகரங்களிலிருந்து பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications