வெளுத்து வாங்கும் மழை... 16 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: தமிழகத்தில் பரவலாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதேபோல் திருவாரூர், நாகை, கரூர், காஞ்சீபுரம், தர்மபுரி, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில் இடைவிடாமல் மழை கொட்டு வதால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
புதுச்சேரி பகுதியிலும் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
திருவள்ளுவர் பல்கலைக் கழகம் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு செமஸ்டர் தேர்வு இன்று நடத்தப்படுவதாக இருந்தது.
இத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications