என்னை மீடியாக்கள் குற்றவாளியாகவே ஆக்கிவிட்டன: ராசா

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் முன்னிலையில் நடந்த விவாதத்தின்போது ராசா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்தியர்ஜுனா வாதாடிகையில்,
மனதில் தோன்றிய ஒரு தொகையை சி.ஏ.ஜி. குறிப்பிட்டுள்ளார். பிரமிக்கத்தக்க அளவில் ஒரு தொகையை (ரூ.1.76 லட்சம் கோடி) வருவாய் இழப்பாக சி.ஏ.ஜி. குறிப்பிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தொகையாகும். இதை சி.ஏ.ஜி.யின் அறிக்கையை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விஷயம் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழுவின் ஆய்வில் உள்ளது. இதில் நீதிமன்றம் என்ன முடிவெடுக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்? என்றனர்.
இதற்கு பதிலளித்த அந்தியர்ஜுனா, எந்த அடிப்படையில் சி.ஏ.ஜி. மதிப்பிட்டுள்ளாரோ, அது மதிப்பீடு செய்வதற்கான தரமான முறையல்ல. 2003ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து சி.ஏ.ஜி. விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆனால், ராசா 2007ம் ஆண்டு மே 16ம் தேதி தான் அமைச்சரானார்.
ராசாவுக்கு முன்பே, அந்தத் துறையின் அமைச்சர்களாயிருந்த தயாநிதி மாறன், அருண் ஷோரி ஆகியோர் 52 நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்கிவிட்டனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தொலைத்தொடர்புத் துறை செயல்பட்டுள்ளது. டிராய் அமைப்பின் பரிந்துரைகளை ரத்து செய்யும் அதிகாரம் சி.ஏ.ஜிக்கு கிடையாது.
டிராய் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே செயல்பட்டுள்ளபோதும், இந்த முறைகேடுகளுக்கு முழு பொறுப்பும் ராசாதான் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் சி.ஏ.ஜியின் அறிக்கை உள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சி.ஏ.ஜி. போன்ற அமைப்பு மத்திய அரசும் அமைச்சரும் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றனர்.
தொடர்ந்து பேசிய அந்தியர்ஜுனா, ராசா மெளனமாக இருப்பதால் அவர் தன்னை குற்றவாளி என்று ஒப்புக் கொண்டதாக அர்த்தமாகாது. இந்த விஷயம் நீதிமன்ற விசாரணையில் உள்ளதால், ஒரே ஒரு செய்தியாளரிடம் மட்டுமே பேச அவர் ஒப்புக் கொண்டார். ஆனால், அதற்கு முன்னரே ராசாதான் குற்றவாளி என ஊடகங்கள் தீர்ப்பளித்துவிட்டன. ராசாதான் ரூ.1.76 லட்சம் கோடி இழப்புக்கு காரணம் என்ற தோற்றத்தை உருவவாக்கிவிட்டனர்.
அரசியலமைப்புச் சட்டப்படியான பொறுப்பு, அரசியல் நிர்பந்தம், தனது கட்சித் தலைமையின் அறிவுறுத்தல் காரணமாகவே ராசா தனது பதவியை நவம்பர் 14ம் தேதி ராஜிநாமா செய்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் தனது தரப்பு வாதத்தை எடுத்துச் சொல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஆனால், பிரச்சனை நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போதே, தினம் ஒரு பரபரப்புச் செய்தியை ஊடகங்கள் வெளியிடுகின்றன. இதன் காரணமாக நீதிமன்றத்தின் நம்பிக்கை ஆட்டம் கண்டுவிடக் கூடாது. இதனால் ராசா விரக்தியடைந்துள்ளார் என்றார்.
இதையடுத்து, ராசா அப்படி கருதத் தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications