ராஜபக்சேவை கைது செய்யக் கோரி லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு!
இலங்கை அதிபர் ராஜபக்சே தனிப்பட்ட பயணமாக பிரிட்டனுக்கு வந்துள்ளார் .அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரை எதிர்த்து இலங்கை தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ராஜபக்சே உரை நிகழ்த்த இருந்தார். இலங்கை தமிழர்கள் எதிர்ப்பால் இது ரத்து செய்யப்பட்டது.
இதனால் அவர் கிட்டத்தட்ட ஹோட்டலிலேயே சிறைவைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக ராஜபக்சேயையும் அவருடன் வந்துள்ள ராணுவ தளபதிகளையும் கைது செய்ய வேண்டுமென இங்கிலாந்து தமிழர் ஒன்றியம் லண்டன் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளது. இதற்கான மனுவில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் கையெழுத்திட்டுள்ளன.
ஏற்கெனவே, பிரிட்டன் வாழ் தமிழர்கள், அந்நாட்டில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் ராஜபக்சேயின் போர்க்குற்றம் குறித்து புகார் கொடுத்து வருகின்றன.