டிசம்பர் 6ல் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்!

இது குறித்து நாமக்கல் மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ஜோதி குப்புசாமி கூறுகையில்,
தமிழகத்தில் மொத்தம் 6,500 தனியார் பேருந்துகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் மிக அதிகமான சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.
நெடுஞ்சாலைகளை லாரிகள் ஒரு நாள் கடந்து சென்றால் மீண்டும் அதே வழியாக வர பல நாட்கள் ஆகும். ஆனால் பேருந்துகள் பேருந்துகள் ஒரு நாளைக்கு பலமுறை நெடுஞ்சாலைகளைக் கடக்கின்றன.
ஒரே நெடுஞ்சாலையை அடிக்கடி கடக்கும் பேருந்து ஆண்டிற்கு சராசரியாக ரூ. 7 லட்சம் வரை சுங்கவரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்களை விட பேருந்து உரிமையாளர்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆண்டு காலமாக பேருந்து கட்டணம் உயர்த்தபடவே இல்லை. இந்நிலையில் அதிகமாக வசூலிக்கப்படும் சுங்க வரியால் பேருந்துகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு்ள்ளோம்.
சுங்கச் சாவடிகளில் ஏற்கனவே அமலில் இருந்த ஆண்டுக் கட்டணம் செலுத்தி, பலமுறை கடக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்து வரும் 5ம் தேதி நள்ளிரவு முதல் 6ம் தேதி நள்ளிரவு வரை தொடர்ந்து 24 மணிநேரம் தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்றார்.












Click it and Unblock the Notifications