கள் இயக்கம் சார்பில் கரூரில் அஸ்வமேத யாகம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
கரூர்: தமிழகத்தில் கள் இறக்கும் உரிமை கோரி கரூரில் அஸ்வமேத யாகம் நடத்த போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கள் இறக்குவது அரசியல் சட்டம் மக்களுக்கு அளித்திருக்கும் உணவு தேடும் உரிமையாகும். இந்த உரிமையை மீட்க தமிழ்நாடு கள் இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது.
கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும், அரசின் தவறான அணுகுமுறையை கண்டித்தும் கரூரில் அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தோம். ஆனால், இதற்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
எனவே, எங்களது உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நிச்சயமாக கரூரில் அஸ்வமேத யாகம் நடத்துவோம். இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications