நாங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை-எதியூரப்பா புகாரை மறுக்கும் குமாரசாமி
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவே கௌடா குடும்பம் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் முதல்வராக குமாரசாமி மறுத்துள்ளார்.
அன்மையில் கர்நாடக முதல்வர் எதியூர்பபா, தேவே கௌடாவும், குமாரசாமியும் க்ரநாடக முதல்வர்களாக இருந்த காலத்தில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், அந்த நிலங்களை கைப்பற்றி ஏழை, எளிய மக்களுக்கு அளிப்பது பற்றி தான் சிந்தித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை குமாரசாமி மறுத்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
எதியூரப்பா எந்தவித ஆதாரமும் இன்றி எங்கள் குடும்பத்தின் மீது பழி சுமத்துகிறார். தேவே கௌடா தன் பதவிக் காலத்தில் எந்த அரசு நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை.
புகார் கூறப்படும் நிலம் எங்கள் குடும்பத்தார் பெயரில் இல்லை. மேலும் அதே பகுதியில் எங்களுடைய நிலம் என்று சொல்லபப்டும் 40 ஏக்கர் எங்களுடையதே கிடையாது என்றார்.












Click it and Unblock the Notifications