தொடர் மழையால் ஏரல் அருகே போக்குவரத்து பாதிப்பு: மக்கள் அவதி
ஏரல்: ஏரல் அருகே மழை வெள்ளத்தில் சாலைகள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஏரல் பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக அங்குள்ள வயல்கள் தண்ணீரில் மூழ்கி வாழை, கொடிக்கால் உள்ளிட்ட பயிர்கள் சேதமாகிவிட்டன. மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் பல வீடுகள் இடிந்துள்ளன.
ஏரல் ஆற்று பாலத்தில் நேற்று முன்தினம் தண்ணீ்ர் பாலத்தை தொட்டுக் கொண்டு சென்றது. எந்த நேரத்தில் பாலம் மூழ்குமோ வெள்ளம் ஊருக்குள் வருமோ என்ற பயத்தில் மக்கள் இருந்தனர். ஆனால் மழை அளவு குறைந்ததால் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் பாலம் மூழ்காமல் தப்பியது.
கன மழையால் வெள்ள நீர் சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது. ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. காரவிளை கிராம தரைப்பாலத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் சென்றதால் நேற்று மதியத்தில் இருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஏரலில் இருந்து குரும்பூர் வழியாக செல்லும் பேருந்துகள் குரங்கனி, தெந்திருப்பேரை வழியாகவும், சில பேருந்துகள் ஆத்தூர் வழியாகவும் செல்கின்றன.












Click it and Unblock the Notifications