சர்வதேச சர்க்கரை கவுன்சில் துணை தலைவராக பி.சி. குப்தா தேர்வு
லண்டன்: சர்வதேச சர்க்கரை கவுன்சிலின் துணை தலைவராக இந்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை செயலாளர் பி. சி. குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2011-ம் ஆண்டிற்கான சர்வதேச சர்க்கரை கவுன்சிலின் கூட்டம் லண்டனில் நடந்தது. அதில் தான்சானியர் தலைவராகவும், இந்தியர் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குப்தா தற்போது இந்தியாவின் உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை செயலாளராக இருக்கிறார். இந்த கவுன்சிலில் மொத்தம் 85 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா கடந்த 1993-ம் ஆண்டு சர்வதேச சர்க்கரை கவுன்சிலின் உறுப்பினரானது.
உலகிலேயே இந்தியா தான் அதிக அளவாக சுமார் 23.5 மில்லியன் மெட்ரிக் டன் சர்க்கரை பயன்படுத்துகிறது.
சர்க்கரைப் பிரிவில் இந்தியாவின் ஒத்துழைப்பை கவுன்சில் வெகுவாக பாராட்டியது. கவுன்சிலின் அடுத்த கூட்டம் 2012-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கவிருக்கிறது.












Click it and Unblock the Notifications