For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்சேவுக்கு எதிராக பிரிட்டன் கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்ததாக பரபரப்பு

Google Oneindia Tamil News

Rajapakse
லண்டன்: போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவைக் கைது செய்ய இங்கிலாந்தைச் சேர்ந்த கோர்ட் ஒன்று கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அசுரன், ராட்சசன், கொடூரன், மிருகம் என்று என்ன விதமான கொடூரமான வார்த்தைகள் உள்ளதோ அதையெல்லாம் மிஞ்சும் வகையி்ல் போய் விட்டது ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள் கூட்டம் போட்ட கொலை வெறியாட்டம்.

ராஜபக்சே சகோதரர்கள் மட்டுமல்லாமல் சரத் பொன்சேகாவும் ஒரு மிகப் பெரிய போர்க் குற்றவாளி என்பதை அனைவருக்கும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது சமீபத்தில் வெளியான கொடூரப் படுகொலை குரித்த வீடியோ காட்சிகள்.

ராஜபக்சே லண்டனுக்குப் போயிருந்த சமயம் பார்த்து இந்த கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி ஒரு ஓட்டத்தை வாழ்க்கையில் ராஜபக்சே ஓடியிருக்க மாட்டார், இப்படி ஒரு பீதியை அவர் தனது வாழ்க்கையில் சந்தித்திருக்க மாட்டார் என்று கூறும் அளவுக்கு லண்டனுக்குப் போன அவர் உயிரைக் கையில் பிடித்தபடி பிரிட்டிஷ் அரசிடம் காலில் விழாத குறையாக கெஞ்சி, உயிர் தப்பி இலங்கைக்கு ஓடி வந்து சேர்ந்துள்ளார். உயிர்ப் பயம் என்றால் என்ன என்பதை இங்கிலாந்து வாழ் தமிழர்கள் ராஜபக்சேவுக்குக் காட்டி விட்டனர்.

இப்போது ராஜபக்சேவுக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அவருக்கு எதிராக இங்கிலாந்து கோர்ட் ஒன்று கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கையின் சிங்கள இதழான திவயின இதுதொடர்பான செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.

மத்திய லண்டனில் உள்ள ஹார்ஸ்பெர்ரி ரோடு மாஜிஸ்திரேட் கோர்ட் இந்த கைது வாரண்ட்டைப் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

போர்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் ராஜபக்சே உள்ளிட்டோரைக் கைது செய்யக் கோரி இந்தக் கோர்ட்டில் புலம் பெயர்ந்த தமிழர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

டிசம்பர் 2ம் தேதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் தற்போது ராஜபக்சே இங்கிலாந்து தப்பி ஓடி இலங்கைக்கு வந்து விட்டார்.

இங்கிலாந்து கோர்ட் ஒன்று, இன்னொரு நாட்டின் அதிபரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்திருப்பது இதுவேமுதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த செய்தி சரியாக இருந்தால், இனிமேல் ராஜபக்சேவால் இங்கிலாந்து பக்கமே போக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X