இலங்கை பயணத்தை ரத்து செய்த பிரிட்டிஷ் அமைச்சர்!

இலங்கை மீது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற புகார்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், பிரிட்டிஷ் அமைச்சரின் இந்த பயண ரத்து மிகுந்த முக்கியம் பெற்றுள்ளது.
வரும் 7ம் தேதி இலங்கை வர திட்டமிட்டிருந்தார் பிரிட்டிஷ் அமைச்சர் அலிஸ்டெயர் பர்ட் . இலங்கைப் பயணத்தை ரத்து செய்தாலும், திட்டமிட்டபடி அவர் மாலத்தீவு மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உரை ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவருக்கு பிரிட்டன் அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டி அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இச்சம்பவம் தொடர்பாக இலங்கை அரசுத் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், பிரிட்டன் அமைச்சர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார் என்று அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தமது அமைச்சரின் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து பிரிட்டன் அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications