For Daily Alerts
Just In
ஈழத் தமிழர் அவலம்-பிரதமரை கருணாநிதி நேரில் சந்திக்க நெடுமாறன் கோரிக்கை
மதுரையில் அவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் போர் முடிந்துவிட்டது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால் மறுகுடியமத்தப்படாமல் முகாம்களில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும்போது, இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படுகின்றனர். இதுதொடர் கதையாகி வருகிறது.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் நிலைமை சீராகுவதற்கும், மறுகுடியமர்வு குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதல்வர் கருணாநிதி நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்த வேண்டும்.
அந்தச் சந்திப்பின்போது, தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினால் தாக்கப்படுவது குறித்து பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Comments
Story first published: Monday, December 6, 2010, 12:07 [IST]