சிலி சிறையில் தீ விபத்து: 81 பேர் பலி, ஆபத்தான நிலையில் 14 பேர்

Subscribe to Oneindia Tamil

சாண்டியாகோ: சிலி தலைநகர் சாண்டியாகோவில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 81 கைதிகள் பலியாகினர்.

சிலியில் சான்மிகுல் என்ற இடத்தில் சிறை உள்ளது. அது 1,100 பேர் இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதில் அளவுக்கு அதிகமாக 1,960 கைதிகள் அடைக்கப்பட்டிருநதனர். இந்நிலையில் அங்கு நேற்று காலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்த கைதிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் 81 பேர் தீயில் கருகி உயிர் இழந்தனர். 14 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தால் சிறைச்சாலை புகை மண்டலமாக காட்சியளித்து. தீ வேகமாக சிறை முழுவதும் பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திறகு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட கைதிகள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது தான் யாரோ வேண்டுமன்றே சிறைக்கு தீவைத்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் மூச்சு முட்டி இறந்துள்ளனர். அவர்கள் மரணச் செய்தி அவரவர் குடும்பத்தார்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

செய்தி அறிந்த உறவினர்கள் சிறை முன் பெருங்திரளாகக் கூடி அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், கல், கண்ணாடி பாட்டில்களை எறிந்தும் ஆர்பாட்டம் நடத்தினர்.

இந்த சம்பவம் தனக்கு மன வேதனை அளிப்பதாக அந்நாட்டு அதிபர் செபஸ்டியன் பினேரா தெரிவித்துள்ளார். அவர்கள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+