Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிபிஐ கைப்பற்றிய ராஜாவின் முக்கிய டைரிகள்

Subscribe to Oneindia Tamil

Raja
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சமீபத்தில் சிபிஐ சோதனைக்குள்ளான முன்னாள் அமைச்சர் ராஜாவின் வீட்டிலிருந்து முக்கிய டைரிகளை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவை ராஜாவின் பெர்சனல் டைரிகளாகும். 2003 முதல் 2010 வரையிலான கால கட்டத்தில் எழுதப்பட்டவை. அனைத்தும் தமிழில் எழுதப்பட்டுள்ளனவாம்.

டைரிகளில் பல முக்கியத் தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் பலருக்குக் கொடுக்கப்பட்ட பணம் குறித்த விவரங்கள் முக்கியமாக இடம் பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், இரண்டு அரசு வக்கீல்களின் பெயர்கள், அவர்களது விவரங்கள், டெல்லி, சென்னையைச் சேர்ந்த சில ஹவாலா டீலர்களின் விவரங்கள் உள்ளிட்டவை உள்ளனவாம். இவர்களுக்கு ராஜா சார்பில் பணம் கொடுக்கப்பட்டதாக அதில் தகவல்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமரின் கடிதமும் கிடைத்தது:

மேலும் சிபிஐ சோதனையின்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற நடைமுறையை நிறுத்தி வைக்குமாறும், ஏல முறையை கடைப்பிடிக்குமாறும் கூறி ராஜாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய ஒரிஜினல் கடிதமும் கிடைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+