சிபிஐ கைப்பற்றிய ராஜாவின் முக்கிய டைரிகள்
இவை ராஜாவின் பெர்சனல் டைரிகளாகும். 2003 முதல் 2010 வரையிலான கால கட்டத்தில் எழுதப்பட்டவை. அனைத்தும் தமிழில் எழுதப்பட்டுள்ளனவாம்.
டைரிகளில் பல முக்கியத் தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் பலருக்குக் கொடுக்கப்பட்ட பணம் குறித்த விவரங்கள் முக்கியமாக இடம் பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், இரண்டு அரசு வக்கீல்களின் பெயர்கள், அவர்களது விவரங்கள், டெல்லி, சென்னையைச் சேர்ந்த சில ஹவாலா டீலர்களின் விவரங்கள் உள்ளிட்டவை உள்ளனவாம். இவர்களுக்கு ராஜா சார்பில் பணம் கொடுக்கப்பட்டதாக அதில் தகவல்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமரின் கடிதமும் கிடைத்தது:
மேலும் சிபிஐ சோதனையின்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற நடைமுறையை நிறுத்தி வைக்குமாறும், ஏல முறையை கடைப்பிடிக்குமாறும் கூறி ராஜாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய ஒரிஜினல் கடிதமும் கிடைத்துள்ளது.