For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜா, உதவியாளர் சந்தோலியாவிடம் சிபிஐ விசாரணை தொடங்கியது?

Google Oneindia Tamil News

Raja
டெல்லி: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராஜா மற்றும் அவரது முன்னாள் செயலாளர் சந்தோலியா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் டெல்லி, சென்னை, பெரம்பலூரில் உள்ள ராஜாவின் வீடுகள், அவரது நண்பர்கள், உதவியாளர்கள், உறவினர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது முக்கியமான 3 டைரிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த டைரிகள் ராஜாவால் எழுதப்பட்டவை. அதில் சங்கேத வார்த்தைகளில் யார்யாருக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று ராஜா மற்றும் அவரது முன்னாள் செயலாளர் சந்தோலியா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
The Central Bureau of Investigation (CBI) officials have started questioning the former Union Telecom Minister A Raja in connection with the 2G spectrum allotment scam. Sources said that CBI officials also grilling A Raja"s aide Chandolia. The new move by CBI has came after raiding Raja"s residence in Chennai and Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X