Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபாச சிடியை வெளியிடாமல் இருக்க ரூ. 20 கோடி தருவதாக கூறினார் நித்தியானந்தா-லெனின்

Subscribe to Oneindia Tamil

Lenin Karuppan
பெங்களூர்: தானும், ரஞ்சிதாவும் அந்தரங்கமாக, படுக்கை அறையில் இருக்கும் காட்சி அடங்கிய வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ. 20 கோடி பணம் தருவதாக பேரம்பேசினார் சாமியார் நித்தியானந்தா என்று கூறியுள்ளார் அந்த சிடியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய லெனின் கருப்பன்.

லெனின் கருப்பன், நித்தியானந்தாவிடம் சீடராகவும், டிரைவராகவும் இருந்தவர். இவர்தான் ரஞ்சிதாவுடன், நித்தியானந்தாவுக்கு உள்ள தொடர்புகளை அறிந்து அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் படுக்கை அறையில் இருக்கும் நெருக்கமான காட்சிகளை வீடியோவில் படமாக்கி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

நேற்று பெங்களூரில் செய்தியாளர்களைச்சந்தித்தார் லெனின் கருப்பன். அப்போது அவர் கூறுகையில்,

நித்யானந்தா தொடர்பான சி.டி.யை நான் வெளியிடும் முன்பும், அதற்கு பிறகும் ரூ.20 கோடி வரை என்னிடம் அவர் பேரம் பேசினார். சி.டி.யை வெளியிட வேண்டாம், எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் என்றும் நித்யானந்தா கேட்டுக் கொண்டார்.

நித்யானந்தா இங்கு சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார். நான் கிறிஸ்தவர் என்று நித்யானந்தா கூறி உள்ளார். நான் இந்து மதத்தை சேர்ந்தவன். எனது தந்தை கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர் என்பதால் தான் எனக்கு லெனின் என்று பெயர் வைத்தார்.

என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனியார் நிறுவனம் மூலம் நித்யானந்தா ராமநகரில் 5 வழக்கு தொடுத்துள்ளார். தற்போது அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், கோர்ட்டில் நான் ஆஜர் ஆகவிடாமல் தடுக்கவும், சாட்சிகளை அழிக்கவும் முயற்சி செய்கிறார். அது நடக்காது.

சமீபகாலமாக நித்யானந்தா எனக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என்றார் லெனின்.

நாசப்படுத்திய நித்தியானந்தா-பெண் என்ஜீனியர் குமுறல்

இதற்கிடையே நித்தியானந்தா தன்னை கற்பழித்து நாசப்படுத்தியதாக கூறியுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். இதுதொடர்பாக ராம் நகர் கோர்ட்டில் அவர் ரகசிய வாக்குமூலம் தரவுள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸாரிடம் புகார் மனு ஒன்றை அவர் அளித்துள்ளார்.

அதில் அப்பெண் கூறியிருப்பதாவது...

"நான் சாமியார் நித்யானந்தா ஆசிரமத்திற்கு கடந்த 2006-ம் ஆண்டு சென்றேன். அங்கு நடந்த பல்வேறு யாகங்களில் கலந்து கொண்டேன். நித்யானந்தாவின் சொற்பொழிவுகளை அடிக்கடி கேட்டேன். இது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. இதனால் அவரது அறைக்கு அடிக்கடி சென்று ஆசி பெறுவேன்.

ஒருநாள் நான் அவரிடம் ஆசி பெற சென்ற போது மதுபானம் வாங்கி வா என்று கூறினார். இதைக் கேட்டதும் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

இதுபற்றி நான் அங்கிருந்த சீடர்களிடம் போய் சொன்னேன். அதற்கு அவர்கள், சுவாமிஜி எது சொன்னாலும் அதை அப்படியே செய். அவரை ஒருபோதும் எதிர்த்து பேசி விடாதே. தெய்வ குற்றமாகி விடும் என்று பயம் காட்டினார்கள்.

கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்தார்

உடனே நான் மைசூர் ரோட்டில் உள்ள மது கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கி வந்து நித்யானந்தாவிடம் கொடுத்தேன்.

சிறிது நேரம் தியானம் செய்த அவர் அந்த மது பாட்டிலை என்னிடம் கொடுத்து குடிக்கச் சொன்னார். எனக்கு பயமாக இருந்தது. எனக்கு மது அருந்தி பழக்கம் இல்லை. என்னை விட்டு விடுங்கள் சாமி என்று கெஞ்சினேன்.

அதற்கு அவர், மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றால் தியாக குணம் அவசியம். அந்த குணத்தை நீ பெற வேண்டும் என்பதற்காகத்தான் குடிக்கச் சொன்னேன். இதில் தவறு எதுவும் இல்லை என்றார்.

கற்பழிப்பது மோட்ச மார்க்காமாம்!

இதனால் நான் மது குடித்தேன். சிறிது நேரத்தில் நான் போதையில் மயங்கியதும் என்னை நித்யானந்தா பலவந்தமாக கற்பழித்தார். இதனால் நான் கதறி அழுதேன். ஏன் என்னை நாசப்படுத்தினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர், இதுதான் மோட்ச மார்க்கம். கவலைப்படாதே என்று கூறினார்.

சிலநாள் கழித்து அவர் என்னையும் மேலும் சில இளம்பெண்களையும் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகருக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை கவர்ச்சியாக உடை உடுத்தும் படி கூறினார். அவரும் காவி உடைக்கு விடை கொடுத்து விட்டு ஜீன்ஸ்-டி-சர்ட் அணிந்து கொண்டார்.

நிர்வாணமாக ஆட வைத்தார்:

என்னை அங்குள்ள “நிர்வாண கிளப்" ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக இருந்தனர். அவர்களைப் போல் எங்களையும் நிர்வாணமாக நின்று ஆட வைத்தார். இது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தாலும் அவர் வற்புறுத்தலால் எதுவும் செய்ய முடியவில்லை. லாஸ்வேகாசில் வைத்தும் அவர் என்னை கொடூரமான முறையில் கற்பழித்தார்.

இதுபற்றி போலீசில் புகார் செய்தால் என் மானம் போய் விடுமே என்று கருதி அவர் மீது புகார் எதுவும் செய்யவில்லை. 2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அவரது பிடியில் சிக்கி தவித்தேன். அவரது சித்ரவதை தொடர்ந்ததால் ஆசிரமத்தை விட்டு வெளியேறினேன் "என்று கூறியுள்ளார்.

விரைவில் அப்பெண் ராம்நகர் கோர்ட்டில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+