தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கெல்லாம் வாய்ப்பே இல்லை-ஸ்டாலின்
தஞ்சாவூர்: தமிழகத்தில் ஆட்சி மாறும் என்று கருதுவோர் ஏமாற்றத்துக்குள்ளாவர். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு கிராமத்தில் 2.53 கோடியில் கட்டப்பட்ட 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரம், அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை ஆகியவற்றை வியாழக்கிழமை திறந்து வைத்தார் ஸ்டாலின்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
திமுக ஆட்சியை விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதாகவும் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் இதுபோன்ற முற்போக்குத் திட்டங்களைத் தொடங்கக் கூடாது என்று எண்ணியவர்கள்தான் அவர்கள்.
திருமண உதவித் திட்டத்தை, சத்துணவில் முட்டையை, சமத்துவபுரத் திட்டத்தை நிறுத்தியவர்கள் அவர்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் நிச்சயமாக நிறுத்தப்படும். ஆனால், அந்த நிலை வருவதற்கான வாய்ப்பே இல்லை.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் கருணாநிதிதான் ஆட்சிக்கு வருவார். அவரால்தான் 21 லட்சம் குடிசை வீடுகளும் கான்கிரீட் வீடுகளாக மாறப் போகின்றன. அந்த நம்பிக்கையை, நாங்கள் மட்டுமல்ல, மக்களும் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர். எனவே, அந்த நம்பிக்கையோடு இந்த ஆட்சிக்கு பக்கபலமாக மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications