பஸ் எரிப்பு வழக்கு-மதானி மனைவி உள்பட 13 பேரை விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி
திருவனந்தபுரம்: தமிழக பேருந்து எரிப்பு வழக்கில் மதானியின் மனைவி சூபியா மதானியிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு எர்ணாகுளத்தில் இருந்து சேலம் புறப்பட்ட தமிழக அரசுப் பேருந்து துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இந்த வழக்கை முதலில் உள்ளூர் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட மதானியை விடுதலை செய்ய அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. என்ஐஏ நடத்திய விசாரணையில் பேருந்து எரிப்பு சம்பவத்தில் மதானி மனைவி சூபியாவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு சூபியா கைது செய்யப்பட்டார்.
வழக்கில் அவரை 10வது குற்றவாளியாக சேர்த்தனர். இந்நிலையில் சூபியா உள்பட 13 பேரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி மத்திய அரசிடம் என்ஐஏ அனுமதி கோரியது. இந்த சம்பவம் நடந்த அன்று பேருந்து எரிப்பில் ஈடுபட்டவர்களிடம் சூபியா போனில் பேசிய முக்கிய ஆவணங்களையும் மத்திய அரசிடம் என்ஐஏ சமர்ப்பித்துள்ளது.
இதையடுத்து மதானி மனைவி உள்பட 13 பேரிடமும் விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கிடையே கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications