டெல்லியில் குடியேறுபவர்களால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை-ப.சி. கருத்துக்கு கட்சிகள் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

P Chidambaram
டெல்லி: டெல்லியில் வந்து குடியேறுபவர்களால் தான் தலைநகரில் அதிக அளவில் குற்றங்கள் நடப்பதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அவர் தான் கூறியதை வாபஸ் பெற்றார்.

இதுகுறித்து சிதம்பரம் பேசுகையில்,

டெல்லியில் வந்து குடியேறுபவர்கள் அதிகரிப்பதால் தான் குற்றங்களும் அதிகரிக்கின்றன. இங்கு அங்கீகரிக்கப்படாத பல காலனிகள் உள்ளன. நகரின் வடமேற்கு பகுதிகளில் குடியேறியுள்ளவர்களின் நடவடிக்கையை எந்த நாகரிகமான நகரத்திலும் அனுமதிக்கப்பட முடியாது என்று கூறியிருந்தார்.

அன்மையில் நடந்த கற்பழிப்பு குறித்து கண்டனமும் தெரிவித்தார். டெல்லியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த கூடுதல் காவல் நிலையங்கள் அமைக்கவும், ஏராளமான காவலர்களை பணியில் அமர்த்தவும் மற்றும் கூடுதல் கண்காணிப்பு வாகனங்களை ஈடுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

ப.சிதம்பரத்தின் கருத்துக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தனது பேச்சு குறித்து ப.சிதம்பரம் விளக்குகையில், இடம் பெயர்ந்தோர் என்று நான் கூறியபோது, எந்த மாநிலத்தையும், மதத்தினரையும், மொழியினரையும், இனத்தவரையும் குறிப்பிட்டுக்கூறவில்லை. முற்றிலும் அது ஒரு சாதாரண பேச்சுதான். நானே டெல்லியில்வந்து குடியேறியவன்தான். ஆனால் நான் சொன்னதை சர்ச்சையாக்கி விட்டனர்.

நான் சொல்ல வந்தது நடத்தை குறித்து மட்டுமே. மோசமான நடத்தையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றுதான் நான் கூற வந்தேன். இந்த சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டுமானால், நான் சொன்னதை வாபஸ் பெறுவதே சிறந்தது என்று கருதுகிறேன். எனவே நான் சொன்னதை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+