குளிர்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளிலும் அமளி-நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளிகளே மேலோங்கியிருந்தன. ஒரு அலுவலும் நடக்கவில்லை. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில்ஈடுபட்டதால் இரு அவைகளையும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியும் படு பிடிவாதமாக ஜேபிசி விசாரணையை ஏற்காமலேயே கூட்டத் தொடரையும் நடத்தி ஜவ்வாக இழுத்துக் கொண்டிருந்ததால் இந்த அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற போக்கால், நாட்டு மக்களின் வரிப்பணம் படு மோசமாக வீணடிக்கப்பட்டு வந்தது.
தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நடத்தி வந்த இந்த அலங்கோலத்தைப் பார்த்து நாட்டு மக்கள் கொதிப்படைந்து போயுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிட்டால்தான் என்ன என்று கேட்க ஆரம்பித்துள்ளனர் மக்கள்.
இப்படி இருதரப்பும் பிடிவாதப் போக்கில் குதித்ததால் முடங்கிப் போன நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்கு இன்றுதான் கடைசி நாள்.
கடைசி நாளான இன்றும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவைகளை நடத்த முடியவில்லை. இதையடுத்து பிற்பகல் வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications