சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கும் இனி பாடநூல்கள்: முதல்வர் கருணாநிதி உத்தரவு
சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் இனி பள்ளிகளில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கும் பாடநூல்கள் வெளியிடப்படும். மேலும், அம்மொழிகளுக்கு முறையே தேர்வு நடத்தப்பட்டு, அந்த மதிப்பெண்கள் மதிப்பெண் பட்டியலில் இடம்பெறும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழகத்தில் 2010-2011 கல்வியாண்டில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுபான்மை மொழிச் சங்கங்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தன, அவற்றை கடந்த 11-ம் தேதி நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலும் வலியுறுத்தப்பட்டன.
அம்மாட்டில் பேசிய கலைஞர் சமச்சீர் கலவி திட்டத்தின் கீழ் சிறுபான்மை மொழிகள் கற்பித்தல் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார்.
அதன்படி பள்ளிகளில் தற்போதுள்ள உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற சிறுபான்மை மொழிகளை கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கப்படும்.
மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழி கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் விரைவில் தயாரிக்கப்படும். மேலும், சிறுபான்மை மொழிகளுக்கு முறையே தேர்வு நடத்தி அந்த மதிப்பெண்களும் மதிப்பெண் பட்டியலில் இடம்பெறும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications