2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொது நலன் வழக்குகளுக்கான மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த வழக்கைத் தொடுத்துள்ளன. இதுதொடர்பாக அவை தாக்கல் செய்துள்ள மனுவில், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ராஜா பதவியில் இருந்தபோது, 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்கிடையே தொலைத் தொடர்புத்துறை நடத்திய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் உரிமங்கள் வழங்கியது ஆகியவற்றில் மிகப் பெரிய அளவில் ஊழலும், முறைகேடுகளும், பாரபட்சமும் காட்டப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்புத்துறை 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்ட இரண்டு செய்தி அறிக்கைகள் மூலம் பெருமளவிலான முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியாகிறது.
மேலும் இந்த ஊழல்கள் நடந்திருப்பது உண்மைதான் என்பதை டெல்லி உயர்நீதிமன்றமும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியும் பதிவு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனவே ராஜா பதவியில் இருந்தபோது நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டையும், அதுதொடர்பாக வழங்கப்பட்ட உரிமங்களையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றுகோரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications