அரசியல்வாதிகளுடன் பழகுவதால் எங்களை நியாயமில்லாமல் குறி வைத்துள்ளனர்-காஸ்பர்

மேலும், சோ. ராமசாமி, சுப்பிரமணியம் சாமி ஆகியோரையும் அவர் கடுமையாக தாக்கி விமர்சித்துள்ளார்.
நேற்று நடந்த சிபிஐ விசாரணை குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார் கஸ்பார். அப்போது அவர் கூறுகையில், எங்களது அமைப்பின் மூலமாக 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரப் பணம் கை மாறியதாக கூறப்படுவதை உறுதியாக மறுக்கிறோம்.
எங்களுக்கும், 2ஜி விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நாங்கள் சுத்தமானவர்கள், எங்களது ஆவணங்கள் சுத்தமானவை. தேவைப்பட்டால் எனது நிறுவன பேலன்ஷீட்டைக் கூட காட்டத் தயாராக உள்ளேன்.
ராஜா சுத்தமானவர் என்று நான் கூறவில்லை. அதேசமயம், தான் சுத்தமானவர் என்பதை நிரூபிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள் என்றுதான் கூறுகிறேன்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது ராஜா அதற்கு ரூ. 4 லட்சம் பணம் கொடுத்தார். அப்போது அவர் தொலைத் தொடர்பு அமைச்சர் இல்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
கனிமொழிதான் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் மூளை. ஏழை எளிய கலைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது. கனிமொழியின் கடும் உழைப்பினால் கிராமப்புறங்களோடு நின்று போயிருந்த நாட்டுப்புறக் கலைகளை சென்னை மக்களும் அறிந்து கொள்ள முடிந்தது.
கனிமொழியுடனான நட்பை, தொடர்பை நாங்கள் மதிக்கிறோம். அவர் நிச்சயம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்குவார்.
சிபிஐ விசாரணைக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம். அரசியல்வாதிகளுடன் நாங்கள் தொடர்பு வைத்திருப்பதால்தான் குறி வைக்கப்பட்டுள்ளோம். இது நியாயமே இல்லை என்றார் காஸ்பர்.
தனது பேட்டியின்போது ஆங்கில மீடியாக்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக் கூடாது என்று கூறிய கஸ்பார், சோ. ராமசாமி, சுப்பிரமணியம் சாமி ஆகியோரையும் படு காட்டமாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications