இன்றைய மார்க்கெட்: ஏற்றம் தந்த வங்கி-ஐடி துறைப் பங்குகள்

Subscribe to Oneindia Tamil

இன்று காலை 'முன்னே பின்னே' இழுபறியில் துவங்கிய மும்பை பங்குச் சந்தை, வர்த்தக நேர முடிவில் முதலீட்டாளர்கள் மகிழும் அளவுக்கு பெரும்பாலான பங்குகள் விலை உயர்ந்து நிலைப் பெற்றது.

ஆசியாவின் மற்ற பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி நிலவினாலும், இந்தியப் பங்குச் சந்தை மட்டும் ஏற்றத்தில் முடிந்தது. காரணம், ரிசர்வ் வங்கியின் வட்டிவீத குறைப்பு பற்றிய அறிவிப்பு.

குறிப்பாக இன்றைய வர்த்தகத்தின் பிற்பகுதியில் வங்கித் துறைப் பங்குகள் நல்ல உயர்வு கண்டன.

முன்னணி நிறுவனப் பங்குகள் 30-ல் 21 பங்குகள் விலையேற்றத்தில் கைமாறின. தேசிய அளவில் 3012 நிறுவனப் பங்குகளில் 1535 பங்குகள் லாபத்தில் விற்பனையாகின.

ஐடி துறைப் பங்குகள் வழக்கம் போல அதிக லாபம் கண்டன. 2.79 சதவீத உயர்வு கண்டது இந்தத் துறை. வங்கிகள், உலோகத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறையும் கணிசமான லாபத்தில் நிறைவடைந்தது.

இன்று முதலீட்டாளர்களை மகிழ வைத்த பங்குகள்:

ஹீரோ ஹோண்டா, டிசிஎஸ், இன்போஸிஸ், விப்ரோ, டாடா ஸ்டீல் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி.

அதிக சோகம் தந்த பங்குகள்:

மகிந்திரா அண்ட் மகிந்திரா, டாடா பவர், ஹிந்துஸ்தான் யுனிலீவர், மாருதி சுஸுகி மற்றும் பஜாஜ் ஆட்டோ

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 19850 புள்ளிகளாகவும், நிப்டி 5950 புள்ளிகளாகவும் நிலைப்பெற்றது.

மேலும் விவரங்களுக்கு: பங்குச் சந்தையில் இன்று

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+