கங்கைகொண்டான் ஐடி பார்க் ஜனவரி மாதம் திறப்பு: பணிகள் தீவிரம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அமைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப பூங்காவை வரும் ஜனவரி மாதம் திறந்து வைப்பதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
கங்கைகொண்டானில் 500 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. இதில் 100 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுகிறது.
முதல் கட்டமாக இங்கு ரூ.50 கோடி மதிப்பில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அலுவலகம், சுற்றுச்சுவர், சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகள் வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதிக்குள் நிறைவு பெறும். இதையடுத்து ஜனவரி இரண்டாம் வாரத்தில் தொழில்நுட்ப பூங்காவை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications