சிவகாசியில் டிச. 18, 19ல் நாடார் மகாஜன மாநாடு-சரத், கனிமொழி பங்கேற்பு
புளியங்குடி: நாடார் மகாஜன சங்க நூற்றாண்டு விழா, 69வது மாநாடு மற்றும் மருத்துவ, பொறியியல் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சிவகாசியில் நாளையும், நாளை மறுதினமும் நடக்கின்றன.
இதற்கு நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் தலைமை வகிக்கிறார். நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் முன்னிலை வகிக்கிறார்.
மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், பூங்கோதை, கீதா ஜீவன் மற்றும் சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் புளியங்குடியில் நடந்தது. தமிழ்நாடு நாடார் பேரவை துணை தலைவர் ராஜ்ஜியம் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் வடிவேல் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பிரகாஷ மூர்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் சிவகாசியில் டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநாட்டிற்கு நெல்லை மேற்கு மாவட்டத்தில் இருந்து 200 வாகனங்களில் செல்லவும், ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, சுரண்டை, கடையநல்லூர், சிவகிரி, ராயகிரி, சங்கரன்கோவில், டி.ராமநாதபுரம் பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications