அதிமுக செயற்குழு உறுப்பினரானார் சசிகலா: மேலும் 65 பெண்கள் நியமனம்-ஜெயலலிதா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராக தனது 'உடன் பிறவா சகோதரி' சசிகலாவை அக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா நியமித்துள்ளார்.

அவருடன் 66 பெண்கள் செயற்குழு உறுப்பினராகியுள்ளனர். அவர்களது பெயர் விவரம்:

வி.கே. சசிகலா, டாக்டர் சரோஜா, சக்தி கோதண்டம், கலைச்செல்வி, டி. சகுந்தலா, சி.ஆர். சரஸ்வதி, திருப்பூர் விசாலாட்சி, கெளரி அசோகன், ராஜலட்சுமி, சசிகலா புஷ்பா, சாவித்திரி ஸ்ரீவீரராகவன், சரஸ்வதி ரங்கசாமி, கணிதா சம்பத், வசந்தாமணி, என்.சாந்தி, சுகன்யா மோகன்ராம், சூரிய கலா, குமுதவள்ளி, வனசரோஜா, நாகரத்தினம்,

தமிழ்மொழி ராஜதத்தன், எஸ். அமுதா, கல்பனா, சுமதி, ஜமுனா ராணி, பொன்னம்மாள், லலிதா சரவணன், மல்லிகா பரமசிவம், சத்யபாமா வாசு, லதா சேகர், லீலாவதி உன்னி, டி. கண்ணம்மாள், சகுந்தலா சந்திரன், தமிழரசி, ராஜாத்தி தியாகராஜன், ராஜேஸ்வரி, ரேணுகா மோகன்ராஜ்.

தமிழ்ச்செல்வி வீரமுத்து, அமுதா ரவிச்சந்திரன், சக்தி, பூபதி மாரியப்பன், எஸ். விஜயா, இந்திராணி, பாண்டியம்மாள் தேவி, தனலட்சுமி, ப. வளர்மதி, கெளரி, ஜாக்குலின் அலெக்ஸ், கவிதா, விஜயராணி, எஸ். குமுதா பெருமாள், குருத்தாஸ் என்கிற விண்ணரசி, பாரதி சாம்சன்,

முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், நீலோபர் கபீல், குமாரத்தாய், விஜயா பிச்சை, விஜயலட்சுமி, சாந்தா ஜெயபால், எஸ்.ஆர். லட்சுமி, ஜி. கங்கா, செளந்திரவள்ளி, எஸ். விமலா, இந்திரா முனுசாமி ஆகியோர் ஆவர்.

யாரும் புனிதமான துறவிகள் இல்லை-ஜெ:

ஜெயலலிதா வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். 2001ம் ஆண்டு முதலான தொலைத் தொடர்புத்துறையின் நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக விசாரணை அமைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளதையும் நான் வரவேற்கிறேன்.

ராசாவுக்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் யாரும் புனிதமான துறவிகள் இல்லை என்பதை தெளிவாகிவிட்டது.

எனவே ஸ்பெக்ட்ரம் ஊழலை 2001ஆம் ஆண்டிலிருந்து விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.

இருப்பினும் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் விசாரணையை உச்சநீதி மன்றம் கண்காணிக்கும் என்பதை காரணம் காட்டி நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு தவிர்க்கக்கூடாது.

மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணை வரம்பு என்பது நிச்சயமாக சில வரையறைகளுக்கு உட்பட்டது. முழு உண்மையும் வெளிவர வேண்டும் அதற்கு ஒரே தீர்வு நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பதுதான்.

இந்த நியாயமான கோரிக்கைக்காக அரசியல் வேறுபாடின்றி ஒத்தக் கருத்துக்களை உடைய அனைத்து அரசியல் கட்சிகளுடனும் அதிமுக தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+