மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பாப்பா உமாநாத் காலமானார்!
திருச்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான பாப்பா உமாநாத் திருச்சியில் காலமானார்.
விடுதலைப் போராட்டம், மற்றும் தொழிலாளர்கள் உரிமைக்கான போராட்டத்தில் தன்னை சிறு வயது முதலே இணைத்துக் கொண்டவர் பாப்பா உமாநாத்.
இவரது அயாரத உழைப்பின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். இதன் உச்ச கட்டமாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
இந்த நிலையில், இவர் கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
மருத்துவமனையிலிருந்து, பாப்பா உமாநாத்தின் உடல் கட்சியின் திருச்சி மாவட்டக்குழு அலுவலகமான வெண்மணி இல்லத்திற்கு கொண்டு சென்று அங்கு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அங்கு பல்வேறு கட்சி தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications