ஹைதராபாத்: விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் உடல் நலம் மோசமடைந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து, ஹைதராபாத் நிஜாம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
நாயுடுவின் ரத்த சர்க்கரை அளவு நேற்று பெருமளவில் குறைந்தது. இதையடுத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் பலத்த பாதுகாப்புடன், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில், கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார் நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இன்று பந்த் நடத்த தெலுங்கு தேசம் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். நாயுடுவின் போராட்டத்தை முதல்வர் கிரண் குமார் ரெட்டி அரசு அலட்சியப் படுத்துவதாகவும், விவசாயிகள் நலன் குறித்து அது அக்கறை காட்டவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Telugu Desam Party president Chandrababu Naidu was forcibly shifted to hospital as his health condition deteriorated due to his protest fast. Naidu"s blood sugar level is believed to have dropped on Sunday night, forcing the government to act and shift him to the Nizam"s Institute of Medical Sciences. The TDP chief has been fasting since Friday to demand more compensation for farmers who had lost their crop in the recent rains.