பெரும் நெருக்கடியில் இருப்பதால் ஊழல் குறித்து புலம்புகிறது காங்.-பாஜக
டெல்லி: காங்கிரஸ் கட்சி பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால்தான் மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், ஊழல் குறித்து அது புலம்புகிறது என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் நிதின் கத்காரி.
நேற்று காங்கிரஸ் மாநாட்டில் ஊழல் குறித்தும், தீவிரவாதம் குறித்தும் சோனியா காந்தி கடுமையாகப் பேசினார். இதுகுறித்து கத்காரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது காங்கிரஸ் கட்சி பெரும் நெருக்கடியில் உள்ளது. இதனால் எப்படித் தப்பிப்பது என்று தெரியாமல விழித்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில்தான் ஊழல் குறித்து புலம்பியுள்ளார் சோனியா காந்தி.
பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் அதற்குப் பதிலளிக்காமல், ஊழல் குறித்துப் பேசியுள்ளார் சோனியா காந்தி. அவரது கட்சி சந்தித்த போபர்ஸ் ஊழல் குறித்து மறந்து விட்டார் போலும்.
ஊழலை தடுத்து நிறுத்த முடியாமல் திணறி வரும் மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான மக்கள் அதிருப்தியை திசை திருப்பும் வகையில் இவ்வாறு பேசியுள்ளார் சோனியா காந்தி என்று கூறியுள்ளார் கத்காரி.












Click it and Unblock the Notifications