'மக்களுக்கு உதவ முடியவில்லை': திமுக, அதிமுக, பார்வர்ட் பிளாக் கவுன்சிலர்கள் கூண்டோடு ராஜினாமா
மதுரை: மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யமுடியாததால் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி கொடிக்குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பாலாமணி. இவர் தலையில் கட்சி வேறுபாடின்றி திமுக, அதிமுக, பார்வர்டு பிளாக் கவுன்சிலர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதற்கான கடிதங்களை மதுரை மாவட்ட ஆட்சியர் காமராஜிடம் கொடுத்தனர்.
பின்னர் தங்கள் முடிவு குறித்து அவர்கள் கூறியதாவது,
செல்லம்பட்டி ஊராட்சி தொகுதிகளில் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவ மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்களும் மாவட்ட நிர்வாகத்திடம் எத்தனையோ முறை இது குறி்தது மனுக்கள் கொடுத்தும் பலனில்லை.
கவுன்சிலர்களாக இருந்தும் எங்களால் மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் அடுத்து வரும் தேர்தலின்போது எப்படி வாக்குறுதி அளிக்க முடியும். அதனால் தான் கட்சி வித்தியாசம் இன்றி நாங்கள் ஒன்றாக ராஜினாமா செய்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications