Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருத்துவமனையில் உண்ணாவிரததத்தை தொடருகிறார் நாயுடு-உடல் நலம் மோசமடைகிறது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் இருந்து வரும் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக அவரது டாக்டர் சோமராஜு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில அரசு விவசாயிளுக்கு மழை வெள்ள நிவாரண நிதியை அதிகரிக்க வேண்டும் என்று கோரி கடந்த 4 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார் நாயுடு.

அவரது உடல்நலம் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீஸார் கட்டாயப்படுத்தி நிஜாம் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கும் அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். இன்று 5வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நாயுடுவின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக அவரது தனிப்பட்ட டாக்டர் சோமராஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாயுடுவின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது.

அவர் திரவ உணவையோ அல்லது திட உணவையோ எடுத்துக் கொள்ள மறுத்து வருகிறார். தண்ணீர் கூட குடிக்க மறுக்கிறார். அவரது உண்ணாவிரதம் தொடர்ந்தால் உடல் நலம் மேலும் மோசமடையும். மிகவும் பலவீனமாக காணப்படுகிறார் நாயுடு என்றார்.

இதற்கிடையே, நிஜாம் மருத்துவமனையைச் சேர்ந்த 6 டாக்டர்கள் கொண்ட குழு நாயுடுவின் உடல் நிலையை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.

தற்போது நாயுடுவின் ரத்த சர்க்கரை அளவு சற்று அதிகரித்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, நாயுடுவை இன்று சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சித் தலைவர்கள் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+